பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்
பித்தா பிறைசூடீ (pitha pirai soodi) எழுதியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் இந்த பாடல் பதிகம் திருவெண்ணெய்நல்லூர் திருமுறை பதிகம்! சுந்தரர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள். இந்த பாடலின் திருமுறை ஏழாம் திருமுறை ஆகும்.
இறைவன் சிவபெருமான் சுந்தரரை தடுத்தாட்கொண்ட சிறப்புடையது இத்தலம். இறைவன் முதிய வேதியராய் வந்து வழக்குரைத்து சுந்தரர் தனக்கு அடிமை என்று நிரூபித்து தன்னுடன் அழைத்துச் சென்று அவரை ஆட்கொண்டார். இறைவன் அடியெடுத்துத் தர சுந்தரர் “பித்தா பிறைசூடி” என்ற திருப்பதிகத்தை அருளிய தலம். தலத்தின் பெயர் திருவெண்ணெய்நல்லூர் என்றும் கோவிலின் பெயர் அருட்டுறை என்றும் பதிகத்தில் குறிப்பிடப் பெறுகிறது. அருணகிரிநாதர் இத்தலத்தில் முருகப் பெருமான் மயில் மீது நடனம் புரிதலைக் கண் குளிரக் கண்டு திருப்புகழ் ஒன்றும் பாடியுள்ளார்.
பித்தா பிறை சூடீ பாடல் வரிகள்
பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 1
நாயேன் பலநாளும் நினைப்பு இன்றி, மனத்து உன்னை
பேய் ஆய்த்திரிந்து எய்த்தேன்; பெறல் ஆகா அருள் பெற்றேன்
வேய் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆயா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 2
மன்னே! மறவாதே நினைக்கின்றேன், மனத்து உன்னை
பொன்னே, மணிதானே, வயிர ,ம், மே, பொருது உந்தி
மின் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அன்னே! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 3
முடியேன்; இனிப் பிறவேன்; பெறின் மூவேன்; பெற்றா ஊர்தீ!
கொடியேன் பலபொய்யே உரைப்பேனைக் குறிக்கொள்,
செடி ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அடிகேள்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 4
பாதம் பணிவார்கள் பெறும் பணம் ,ம், அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன்; அறிவு இல்லேன்; அருளாளா
தாது பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆதி! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 5
தண் ஆர் மதிசூடீ! தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரம் மூன்றுய்ம் எரியுண்ண ,ந், நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
அண்ணா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 6
ஊன் ஆய், உயிர் ஆனாய், உடல் ஆனாய்; உலகு ஆனாய்
வான் ஆய்; நிலன் ஆனாய்; கடல் ஆனாய்; மலை ஆனாய்
தேன் ஆர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆனாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 7
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ணச் சில தொட்டாய்
தேற்றாதன சொல்லித் திரிவேனோ? செக்கர்வான் நீர்
ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆற்றாய்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 8
மழுவாள் வலன் ஏந்தீ! மறை ஓதீ! மங்கைபங்கா!
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழுவார்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன்! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே? 9
கார் ஊர் புனல் எய்தி, கரை கல்லித் திரைக்கையால்
பார் ஊர் புகழ் எய்தி, திகழ் பல் மா மணி உந்தி
சீர் ஊர் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் – துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே? 10
இத்திருப்பதிகம், சிவபிரானை நோக்கி, “அடியேன் உனக்கு முன்பே ஆளாகி, இப்பொழுது நீ வந்து என்னை உனக்கு அடியான் என்று சொல்லியபொழுது, ‘அடியவன் அல்லேன்’ என எதிர்வழக்குப் பேசியது தகுமோ” என இரங்கி அருளிச்செய்தது.
Comments
Post a Comment